Anti Drug Awareness (11-08-2025)
தந்தை பெரியார் பிறந்த நாளான (17-09-2025) புதன்கிழமை சமூக நீதிநாள் உறுதிமொழி மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை எடுக்கப்பட்டது. இவ்விழாவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
Dr.S.அனந்த செல்வம்
YRC Programme Officer
சிவகங்கை கல்லூரியில் சைபர் கிரைம் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி (23-09-2025) Youth Red Cross
சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக் கல்லூரியில் இளம் செஞ்சிலுவை மற்றும் இளம் செஞ்சுருள் சார்பாக சைபர் கிரைம் பற்றிய மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் அந்தோணி டேவிட் நாதன் தலைமையில் சிவகங்கை சைபர் கிரைம் ஆய்வாளர் சாந்தகுமாரி மற்றும் சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் இந்நிகழ்வை திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச. அனந்த செல்வம் ஏற்பாடு செய்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக கல்லூரி நூலகர் முனைவர் வாஞ்சிநாதன் மற்றும் பொருளாதார துறை இணை பேராசிரியர் முனைவர் பாலகிருஷ்ணன் வந்திருந்தனர் இந்த நிகழ்ச்சியை பொருளாதாரத்துறை பேராசிரியர் முனைவர் மாயமுருகன் தொகுத்து வழங்கினார். இறுதியாக திட்ட ஒருங்கிணைப்பாளர் நன்றியுரை வழங்கினார் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment